Friday, April 5, 2013
பறந்து போன பண்பாடு - பூவன்
மாற்றங்கள் என்ற பெயரில்
தோற்றங்கள் எத்தனை எத்தனையோ !
நாகரீக ஏற்றம் எனச் சொல்லியே
அநாகரீகத் தோற்றங்கள் அத்தனையும் ...
ஏற்றம் மிக்க உடைகள் யாவும்
காற்றில் ஏற்றியே நம் பண்பாட்டை
தூற்றியே திரிகின்றோம் ....
கலைநயம் கொண்ட சேலைகள் யாவும்
கலைகூடங்களில் கண்டிடும்
ஓலைகள் என ஆனதே ?
வித விதமான உடைகளை
விலைக் கொடுத்து வாங்கியே
தொலைத்தோம் நாம்
விலைமதிப்பில்லாத பண்பாட்டை ...
கலாசாரங்கள் எனக் கூறியே
நாம் சாரமிகு கலைநயங்களை
கல்லறையில் கிடத்திவிட்டோம் ...
மனங்களைப் பறக்கவிட்டு
பண்பெல்லாம் தொலைத்துவிட்டு
பண்பாட்டையும் பாடாய் படுத்திவிட்டோம் ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment