Wednesday, April 3, 2013

பறந்து போன பண்பாடு - ரமணியன்

 பறந்து போன பண்பாடு - ரமணியன்

அந்த காலம் பொற்காலம்
அந்தகனும் கூறிடுவான்.

முகநூலில், முடிந்தால்
முகத்துதி செய் ,மாறாக
உண்மை உரைக்கின் ,
உன் மெய் சிறை படும்  ,
 ..

கேலிச்சித்திரம் வரைய ,
வேலிப்போடும் அரசியல்வாதிகள்
நகைச்சுவை சூனியங்களோ ? 
மிகையான    தற்குறிகளோ ??

கொலையொன்று செய்தாலே கொலையாளி எனின்
இனக்கொலை செய்தவனை என்னென்று கூற?
இனிய விருந்தாளி அவன் இந்நாட்டில் மட்டுமே !
இகழாதீர் இந்த பண்பாட்டை ! 


மகளுடன்  நடைபயிற்சி செய்யும் தந்தை
இனிப்பொன்று  உண்டு,  தனியே நடைதொடர
இனி  பொன் பொழுது  என
ஒளிந்திருக்கும்  நண்பனை
வெளி வர சீழ்கை ஒலிக்கும் குமரி.
சீரழிக்கும் சின்னத்திரை விளம்பரமன்றோ !

தொட்டால் என்ன? பட்டால் என்ன?
கெட்டால் தானே பாவம் -இது கவிமொழியாயின்
கெட்டாலும் பாதுகாப்புடன் கெட
கொட்டிடும் அறிவுரைகள் -- ஒரு திருமதி  மொழியாம்.

"சேர்ந்து வாழ்தல் " இளம்தலைமுறை,
சேர்த்துக்கொண்ட புதிய வாழ்க்கை முறை.
சேர்வதும் பிரிவதும் மனம் போல்
பிக்கலில்லை , பிடுங்கலில்லை ,
இன்பமோ இன்பமாம் இடையிறா இன்பமாம். ..

பண்பாட்டை  காக்க முடியாதாயினும்  ,  கெடுக்காதிருப்போரை 
வெண்பாவில் புகழ் பாடி  சிலையொன்று எடுப்பேன்.

ரமணியன்

No comments:

Post a Comment