Wednesday, April 3, 2013
ஈழமே நீ இடுகாடா - சுந்தரம்ராஜேந்திரன்
ஈழம் தமிழர்கள் வாழ்ந்த பூக்காடு - இன்று
பிணங்கள் எரிந்து முடிந்த சாக்காடு!
பழந் தமிழர்கள் குடும்பம் படும்பாடு – இன்று
உலகத் தமிழினமே தலைகவிழும் வெட்கக்கேடு!
ஈழமேட்டைக் காட்டைக் கழனியாக்கிய தமிழினம் - இன்று
பசிவயிற்றில் புசிக்கக் கையேந்தும் இழிந்தஇனம் !
காலங்காலமாக வாழ்ந்து சிறந்த இந்தஇனம் - இன்று
மிருகங்கள் பல்பட்டுக் கிழிபட்ட தெருப்பிணம் !
தமிழர்கள் பகுதிக்கு தனியீழம் கேட்டது தவறா? அதற்கு
அணுகுண்டு துப்பாக்கிகளால் பதில்சொல்வது முறையா?
வாழும் உரிமைக்கேட்ட மறவனுக்குச் சிறையா? – இன்று
குழந்தைகள் கிழவர்கள் பிணக்குவியலானது கதையா?
ஈழம் மயில்ஆடிய குயில்கூவிய இன்பச்சோலை - இன்று
நாய்நரி பேய்கழுகுகள் திரியும் பாலை !
சிங்கள ராணுவம் சூடியது பிணமாலை – கண்டு
உலகமே கண்ணீர்;சிந்தி கொதிக்குது இவ்வேளே!
ஈழம்இன்று மனிதன்வாழ முடியாச் சிதைந்த கூடு- நிலத்தை
நீருக்குத் தோண்டினாலும் வருவது எலும்புக்கூடு !
தனியீழம் கொடுத்தால் உனக்கென்ன கேடு ? - இன்றேல்
எஞ்சிய தங்கத் தமிழினம் வாழ நல்வழிதேடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment