Wednesday, April 3, 2013
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - சுந்தரம்ராஜேந்திரன்
மதுஇகால் முளைத்த கவர்ச்சி மாது – மது இ மாது
இவ்விரண்டும் எமனின் விசுவாசத் தூது !
மதுதரும் போதையால் வரும்கொடுந் தீது - சொன்னால்
இன்றைய இளைஞர்களுக்கு காது கேட்காது!
மதுமலர் நாடிமனம் மயங்காதவர் எதிர்காலம் பூக்குழி - மது
மெல்ல மெல்ல மனிதனை விழுங்கும் புதைகுழி !
குடியை மறக்க திருக்குறள் படிப்பது நல்வழி - ஓருநாள்
வாழ்ந்தாலும் தீவழி மறந்து நல்வழி நடப்பது அறவழி !
குடிப்பவன் வாழ்க்கை விடியலில்லாத இருட்டு அதனால்
மதுவை மனதால் கூடத் தொடாமல் விரட்டு !
போதையால் கெட்டவர் சரித்திரம் புரட்டு – நல்ல
சமுதாயம் உருவாக அறிவுரை புகட்டு !
இளைஞர்களின் எதிர்காலம் நாட்டின் பொற்காலம் - மதுவை
வேறோடு அழித்தால் மலரும் நற்காலம் !
போதையில் சீரழிந்த ஏழைகளின் எதிர்காலம் - இன்பப்
பூந்தோட்ட மலராயச்; சிரிப்பது எக்காலம்?
கள்ளுப்பானை பொங்குவதால் வீட்டில்ஏங்குது சோற்றுப்பானை- அதனால்
அடுக்களை உறங்குவது வாயில்லா வறுமைப்பூனை !
மதுஇகாடுவீடு சொத்துக்களை அழிக்கும் மதயானை - அதனால்
மதுவை ஒழித்து உண்போம் இன்பத்தேனை !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment